பிரபலங்கள்

இன்றோடு சினிமாவில் பத்தாண்டுகள் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து புகழ்பெற்றவர் சிவகார்த்திகேயன் 2012ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சிவகார்த்திகேயன் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

 இன்று உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த இடம் நான் நினைத்துப் பார்த்திராத நிஜம் என குறிப்பிட்டுள்ள சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளமான டுவிட்டரில் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார்

 மிகக் குறுகிய காலத்தில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயனின் இந்த பங்களிப்பு அனைவராலும் போற்றப்படுகிறது அவர் கூறியுள்ள ட்விட்டர் செய்தியானது 

இன்றோடு சினிமாவில் பத்தாண்டுகள்…

நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு துவங்கியது இந்தப் பயணம்.

இன்று உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த இடம் நான் நினைத்துப் பார்த்திராத நிஜம்.

இந்த தருணத்தில் எனக்கு முதல் பட வாய்ப்பளித்த இயக்குநர் பாண்டிராஜுக்கும், அத்தனை தயாரிப்பாளர்களுக்கும் உடன் நின்று பயணித்த இயக்குநர்களுக்கும் தன்னோடு சேர்த்து என்னையும் மிளிரச் செய்த என் சக கலைஞர்களுக்கும், என் படங்களில் பணியாற்றிய அத்தனை தொழிலாளர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும், நண்பர்களுக்கும், அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக,

என் தாய்த் தமிழுக்கும், என்னை மகனாக, சகோதரனாக, நண்பனால, குடும்பமாக ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களுக்கும், என் ஆரம்பகாலம் முதல் என்னுடைய வெற்றி – தோல்வி அனைத்திலும் உடனிருந்து என்னை கொண்டாடும் ரசிகர்களான என் சகோதர, சகோதரிகளுக்கும் பெரும் நன்றிகள்.

எப்போதும் நான் செய்ய நினைப்பதெல்லாம் இன்னும் கடினமாக உழைத்து உங்களை மகிழ்விப்பதும், நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த வாழ்வை பிறருக்கும் பயன்படுமாய் வாழ்வதும் மட்டுமே!!

என் இதயத்தி ஆழத்தில் இருந்து அன்பும் நன்றிகளும்.

உங்கள் சிவகார்த்திகேயன்” 

Related Articles

Back to top button